13
இன்று (19.06.2021) இந்திய தேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தி M.P பிறந்த தினம் ஆகும். இதையொட்டி கீழக்கரை நகர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், மாவட்ட காங்கிரஸ் துனைத்தலைவருமான A. அமீது கான் Ex M.C தலைமையில் வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள பெரிய ஜும்ஆ பள்ளி வாசல் முன்பு சுமார் 200க்கும் மேற்பட்ட தேவையுடையோருக்கு உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கீழக்கரை நகர் காங்கிரஸ் தலைவர் K.R.D கிருஷ்ணமூர்த்தி இனிப்புகள் வழங்கினார், காங்கிரஸ் பேரியக்க மாவட்ட பொதுச்செயலாளர் G. சந்திர சேகரன், B. சித்திக் ஹூசைன், M.K.S முருகானந்தம், அஐ்மல் கான், ரஹ்மத்துல்லா, சிறுபான்மைப்பிரிவு பொறுப்பாளர் சாலைத்தெரு சீனி முகம்மது இலக்கிய அணி மாவட்ட பொறுப்பாளர் மஹ்முது நெய்னா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
You must be logged in to post a comment.