Home செய்திகள் பாலக்கோடு அருகே பொது வழியை ஆக்ரமிப்பு செய்ததை கண்டித்து ஆர்பாட்டம்..

பாலக்கோடு அருகே பொது வழியை ஆக்ரமிப்பு செய்ததை கண்டித்து ஆர்பாட்டம்..

by ஆசிரியர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெல்ரம்பட்டி கிராமத்தில் முன்னாள் அதிமுக பிரமுகர் கோவிந்தராஜ் என்பவர் பொது வழியை  ஆக்கிரமிப்பு செய்து கட்டடடம் கட்டி வருகிறார் இதனை எதிர்த்து பெல்ரம்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தை 50 க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர் இதில் இரு சமூகத்தை சார்ந்தவர்களுக்கிடையே கலவரம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதனையறிந்த மாரண்டஅள்ளி போலீசார் விரைந்து வந்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர் மேலும் பெல்ரம்பட்டி முக்கிய சாலையில் இருந்து சுமார் 500 மீட்டர் தூத்திற்க்கு பொது வழி ஆக்கிரமிப்புக்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இல்லை என்றால் இரு சமூகத் திருக்கும் கலவரம் ஏற்படும் சூழல் உருவாகும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தி:- சிங்காரவேலு, தர்மபுரி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!