14
இராமநாதபுரம், நவ.21 – தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இராமநாதபுரம் மாவட்டம் சார்பில் தென் மாவட்டங்களில் நடைபெறும் தொடர் படுகொலைகளை கண்டித்து இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகம் நுழைவு வாயில் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார்.இதில் கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசேகர் உட்பட 16 ஒன்றியங்களைச் சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர் கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.