Home செய்திகள் உசிலம்பட்டியில் மாணவர்களுடன் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ.

உசிலம்பட்டியில் மாணவர்களுடன் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ.

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தை திடலில் அமைந்துள்ள நூலகம் மாணவ மாணவிகள் படிக்க முடியாமல் மழைநீர் தேங்கி பல்வேறு தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எம்எல்ஏ ஐய்யப்பன் இடம் கோரிக்கை வைத்திருந்தனர். எம்எல்ஏ ஐயப்பன் பலமுறை யூனியன் அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது .இந்நிலையில் இன்றும் மாணவர்கள் எம்எல்ஏவிடம் முறையிட்டனர்.இதனால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ நூலகத்தில் பயிலும் மாணவ மாணவிகள் உடன் எம்எல்ஏ ஐயப்பன் தலைமையிலான நிர்வாகிகள் சந்தை திடலில் இருந்து நடைபயணமாக வந்து பேரையூர் ரோட்டில் அமைந்துள்ள யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ ஐயப்பனே யூனியன் எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் அமர்ந்திருப்பது உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. சமமந்தப்பட்ட அதிகரிகள் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கலைந்து போகச் செய்தனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!