இராமநாதபுரம், அக்.18- இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மடை துணை மின் நிலையம் டவுன்-2 , டவுன்-3 உயர் மின் அழுத்த பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (அக்.19) ல் நடைபெற உள்ளது. இதனால அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி, முதுநாள் ரோடு, சூரன்கோட்டை, இடையார்வலசை, சிவன் கோயில் , சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைக்கல் வீதி, கே.கே நகர், பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு, சிங்காரதோப்பு, பெரியார் நகர், லாந்தை, அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, எட்டிவயல் பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என ராமநாதபுரம் நகர் உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
உப்பூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை ( அக்.19) ல் நடைபெற உள்ளது. இதனால், உப்பூர், கடலூர், ஊரனங்குடி, சித்தூர்வாடி, காவனூர், கலங்காபுலி பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 வரை மின் நிறுத்தப்படும் என திருவாடானை உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.