23
இராமநாதபுரம், ஜன.11- இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட்டாரம் ஆற்றாங்கரை ஊராட்சி கிராமத்தில் 1, 5 வார்டு மக்களுக்கு தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு, ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது ஊராட்சி தலைவர் முஹமது அலி ஜின்னா, ஊராட்சி துணைத் தலைவர் நூருல் அஃபான் துவங்கி வைத்தனர்.
வார்டு உறுப்பினர் நாகராஜ், முஸ்லிம் ஜமாத் செயலாளர் நாகூர் கனி, இந்து சமூக நிர்வாகிகள் முருகேசன், தேவேந்திரன், கந்தையா, திமுக கிளைச் செயலாளர் அபுல், ஊராட்சி செயலாளர் கண்ணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பக்கீர் இருந்தார்.
You must be logged in to post a comment.