13
இராமநாதபுரம் மாவட்டம் சக்கரகோட்டை ஆதம் நகரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் கோலம், ரங்கோலி, இசை நாற்காலி போட்டி நடந்தது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட செயலர் சை.அக்கீம் கலந்து கொண்டு பரிசு வழங்கினார். மாவட்ட பொருளாளர் ஆயிசா, இராமநாதபுரம் ஒன்றிய செயலர் ஜெமில்கான் ஏற்பாடு செய்தனர். மாவட்ட தலைவர் ஜீவா. அறிவழகன், மண்டபம் ஒன்றிய செயலர் ராவுத்தர் கனி, மகளிரணி பொறுப்பாளர்கள் நாகராணி, வடிவு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம் ..
You must be logged in to post a comment.