17
பாலக்கோடு ஒன்றியத்தில் வரும் 30ம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் 212 வாக்குசாவடியிலும் பணிபுரிய உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலை பயிற்சி வகுப்பில் 341 பணியாளர்களும், மாலை பயற்சி வகுப்பில் 467 பணியாளர்களும் மொத்தம் 795 பணியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர் இப்பயிற்சியானது பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநர் சங்கர் தலைமையில் நடைப்பெற்றது இதனை தருமபுரி மாவட்ட ஆட்சி தலைவர் மலர்விழி பார்வையிட்டார் .மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கோவிந்தன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பழகன் . கௌரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் மற்றும் அலுவலர்கள் மீனா. சண்முகம் குணசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
You must be logged in to post a comment.