தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த செக்கெடி கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன் மகன் ஆனந்த் 32 . மனைவி பழனியம்மாள் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஆனந்த் பெங்களூரில் கட்டிட மேஸ்திரி தொழில் செய்து வருகிறார். இவர் வேலைக்கு போகாமல் குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வருகிறார். இவருக்கு கடன் பிரச்சனை உள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு வீட்டில் அடிக்கடி பிரச்சினை வருவதுண்டு. நேற்று இரவு ஆனந்துக்கும் அவரது மனைவி பழனியம்மாள் இருக்கும் குடும்பப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த ஆனந்த் இரவு 10 மணிக்கு மனைவி குழந்தைகளை வீட்டைவிட்டு வெளியில் தள்ளி வீட்டின் கதவை சாத்திக் கொண்டு வீட்டினுள் உள்ள பேன் கொக்கியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். மற்றும் ஆனந்த் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
17
previous post
You must be logged in to post a comment.