திருச்சியை சேர்ந்த சாதனை மாணவி சுகித்தா, தொடரும் சாதனைகள்.!
சிங்கபூரில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் இந்தியாவின் சார்பாக தங்கம் மற்றும் ஒட்டு மொத்த பெண்களில் சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற பட்டத்தை பெற்ற திருச்சி சுகித்தா திருச்சி மாவட்ட இரயில்வே காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.த.செந்தில்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கடந்த ஒரு வருடத்தில் சிலம்பம் கற்று சிலம்பத்தில் பல புதிய உலக சாதனைகள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட தங்கம் 8 வெள்ளி 4 வெண்கலம் ஆகிய பதக்கங்கள் மற்றும் பல பரிசிகளை சிலம்பத்தில் மாநில, மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வென்றவர் திருச்சி மேலபுதூர் செயின் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவி 6 வகுப்பு படிக்கும் 11 வயது சுகித்தா.
மேலும் சிங்கப்பூரில் சிங்கப்பூர் தமிழ் சங்கம் ஐந்தினை மைந்தர்கள் நடத்திய பாராட்டு விழாவில் சிங்கப்பூர் சிலம்ப தங்க மங்கை எனும் பட்டத்தை கடந்த மாதம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுகித்தா எஸ்.பி. த.செந்தில்குமாரை சந்தித்து ஆசி பெற்றார் அப்பொழுது அவர் சுகித்தாவை பாராட்டி நமது பாரம்பரிய தமிழர் கலையான சிலம்பத்தில் மேலும் பல வெற்றிகளை பெற்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார் உடன் சுகித்தாவின் தந்தை மோகன் இருந்தார்.
You must be logged in to post a comment.