12
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோட்டூர் ஊராட்சி மைக்கேல் பாளையத்தில் தமிழக முதலமைச்சரின் சீரிய திட்டமான கிராம அளவிலான பட்டா மாறுதல் முகாம் நிலக்கோட்டை தாசில்தார் ( பொறுப்பு) வில்சன் தேவதாஸ் தலைமையில் நடைபெற்றது. கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தா கரிகால பண்டியன் பொதுமக்களுக்கு இலவசமாக பட்டாக்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் மண்டல துணை தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர் சென்னா கிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் பாண்டியராஜன், கிராம நிர்வாக அலுவலர்கள் சுமதி, ராமமூர்த்தி , கணேசன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பட விளக்கம்: நிலக்கோட்டை அருகே கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தா கரிகால பாண்டியன் பொதுமக்களுக்கு பட்டா வழங்கிய போது எடுத்த படம்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
You must be logged in to post a comment.