Home செய்திகள் நிலக்கோட்டை அருகே கல்லூரி மாணவி மர்ம சாவு.

நிலக்கோட்டை அருகே கல்லூரி மாணவி மர்ம சாவு.

by mohan

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள செங்கோட்டையை சேர்ந்த பழனிச்சாமி மகள் அபர்ணா தேவி வயது 17. இவர் திண்டுக்கல்லில் உள்ள அரசு எம்.பி.எம். பெண்கள் கலைக் கல்லூரியில் 2 ம் ஆண்டு பி.எஸ்.சி படித்து வருகிறார். தற்போது கொரானா நோய் தொற்று பரவும் காலம் என்பதால் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் கிளாஸில் படித்து வந்தார். தந்தை பழனிச்சாமி , தாயார் சாவித்திரி , அண்ணன் அஜித் குமார் ஆகிய 3 பேருமே வெளியூர்களுக்கு வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் நா தேவி தனியாக இருந்து ஆன்லைன் கிளாஸ் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வேலைக்கு சென்றுவிட்டு வந்த தாயார் சாவித்திரி மற்றும் அஜித்குமார் வீடு பூட்டப்பட்டிருந்தது பார்த்துவிட்டு பக்கத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்று இருக்கலாம் என்று அங்கு விசாரித்தனர். அங்கும் இல்லாததால் அப்புறம் சென்று வீட்டு சன்னலை திறந்து பார்த்தபோது அபர்ணா தேவி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதைப்பார்த்த சாவித்திரி மற்றும் அஜித் குமார் ஆகிய இருவரும் அலறல் சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அபர்ணா தேவியின் உடலை மீட்டனர். பின்னர் உடல் அடக்கம் செய்யலாம் என்று பேசிக்கொண்டிருந்த போது நிலக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. உடனடியாக போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் , போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வாணி, தயாநிதி அவர்கள் விரைந்து சென்று விசாரித்தபோது சாவில் மர்மம் இல்லை தற்கொலை தான் என் மகள் செய்துகொண்டார் என்று சாவித்திரி மற்றும் அவரது தரப்பினர் தெரிவித்தனர். இருப்பினும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகையால் பிரேத பரிசோதனைக்கு அனுமதியுங்கள் என்று கேட்டு 2 மணி நேர விசாரணைக்கு பின்பு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடலை கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக வைத்தனர். அப்போது உடலை பரிசோதித்த போது உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயமும், சந்தேகப்படும் அளவில் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாணி கல்லூரி மாணவி தற்கொலையா? அல்லது கொலை செய்யப்பட்டாரா ? என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.படவிளக்கம் இறந்துபோன அபர்ணா தேவி படத்தில் காணலாம்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!