Home செய்திகள் மைக்கேல்பாளையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் விழா.

மைக்கேல்பாளையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் விழா.

by mohan

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கோட்டூர் ஊராட்சியில் உள்ள மைக்கேல் பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தாகரிகாலபாண்டியன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கும் தமிழக அரசு வழங்கும் கொரானா நிவாரண நிதி முதல் தவணை தொகை ரூபாய் 2 ஆயிரத்தை வழங்கினார். கூட்டுறவு சங்க செயலாளர் மகாமுனி வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கரிகால பாண்டியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொறுப்பாளர் ஜான்போஸ்கோ,ஊராட்சி செயலாளர் சேசுராஜ், மற்றும் திமுகவினர் பலர் கலந்து கொண்டனர் விழாவின் முடிவில் ஊராட்சி மன்ற செயலாளர் பாண்டியராஜன் நன்றி தெரிவித்தார்.படவிளக்கம்: நிலக்கோட்டை அருகே மைக்கேல் பாளையத்தில் பொது மக்களுக்கு கோட்டூர் சுகந்தா ஊராட்சி மன்ற தலைவர் கரிகாலபாண்டியன் கொரானா நிவாரண நிதி ரூ 2 ஆயிரத்தை வழங்கிய போது எடுத்த படம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com