Home செய்திகள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகை

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகை

by mohan

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பிள்ளையார்நத்தம் ஊராட்சி, சிறுநாயக்கன்பட்டி 6-வார்டு பொது மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் நேற்று நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர், சாக்கடை வசதி தெரு விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கேட்டு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கிருந்த நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் ஆகியோர்கள் பொதுமக்களிடம் முறையாக தண்ணீர் நிரந்தரமாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com