திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள தபால் நிலையம் முன்பு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ஆரின் 33 ஆம் ஆண்டு நினைவு தினம் கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் தேன்மொழி சேகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார், மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, அம்மையநாயக்கனூர் நகர செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை நகர செயலாளர் சேகர், ஒன்றியக்குழு துணைத் தலைவர் சீனிவாசன், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வராஜ், முனி ராஜா, அன்பழகன், கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் காட்டு ராஜா, ஊராட்சி மன்ற பொறுப்பாளர்கள் முனியாண்டி, ஜெயசீலன், நகர பொறுப்பாளர , முத்து, அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
You must be logged in to post a comment.