திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கோடாங்கிநாயக்கன்பட்டி ஊராட்சியில் கோடாங்கி நாயக்கன்பட்டி கிராம மக்களுக்கு தொடர்ந்து குடிநீர் வழங்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.இதனை ஏற்று நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர் , நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரெஜினா நாயகம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன் ஆகியோர்கள் உடனடியாக நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து 4 லட்ச ரூபாய் மதிப்பில் கோடாங்கிநாயக்கன்பட்டி காவிரி குடிநீர் தண்ணீர் தேக்கி வைக்க குடிநீர் தொட்டி அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இப்ப நீயே ஒன்றிய கவுன்சிலர் ராஜதுரை மற்றும் வார்டு உறுப்பினர்கள் , ஆகியோர்கள் சென்று பார்வையிட்டனர். நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் தொட்டி அமைக்கும் பணி தொடங்கியது கோடாங்கிநாயக்கன்பட்டி கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
You must be logged in to post a comment.