Home செய்திகள் பெண் கொலையில் திடீர் திருப்பமாக கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை தீர்த்துக்கட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்

பெண் கொலையில் திடீர் திருப்பமாக கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை தீர்த்துக்கட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்

by mohan

 திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே  உள்ள  ரெயில்வேநகர் பகுதியில் கடந்த மாதம்  14 தேதி ஒருசாக்குமூட்டை  தீயில்  எரிந்து கொண்டிருந்தது .. அதில் இருந்து துர்நாற்றமும் வீசியது இதைக்குறித்துதகவல் அறிந்த அம்மையநாயக்கனூர் போலீசார்  சாக்குமூட்டையில்  பற்றி எரிந்த தீயை அணைத்து சோதனையிட்டனர்  அப்போது   அதில் ஒரு பெண் பிணம்  முழுவதுமாக  எரிந்த  நிலையில்  இருப்பது  தெரியவந்தது..  போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தினர்.அதனால்எந்ததுப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை..  இந்த  நிலையில்கரூர் மாவட்டம்  தான்தோன்றிமலைபூங்கா நகரைச் சேர்ந்த  சிவசங்கரன் 47. என்பவர்  கடந்த  மாதம்9 ந்தேதி  தான்தோன்றிமலை காவல் நிலையத்தில்  தனது  மனைவி சூரியகுமாரி வயது 34.  காணவில்லைபுகார் அளித்தார்.அதன்  பேரில்  போலீசார் வழக்கு பதிவு செய்து  தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்  அவர்களுடன்  சேர்ந்து  சிவசங்கரனும்  மனைவியைதேடி  அலைந்தார் . பல்வேறு  இடங்களில்   போலீசார்  தேடியும்  சூரிய குமாரி குறித்து  அவர்களுக்கு எந்த தகவலும்  கிடைக்கவில்லை..இதற்கிடையேசிவசங்கரனின் நடவடிக்கையில்    போலீசாருக்கு சந்தேகம்   ஏற்பட்டுள்ளது.. அவருடைய செல்போனை  ஆய்வு செய்தால்  துப்பு கிடைக்கலாம் என்று போலீசார் கருதினர் ஆனால்      செல்போனை   தொலைத்துவிட்டதாக   போலீசாாிடம்       கூறினார் ..இது போலிசாரின்  சந்தேகத்தைவலுவடைய  செய்தது.. இதையடுத்துஅவருடைய செல்போன் கடைசியாக எங்கு பயன் படுத்தப்பட்டது என்று சைபர் கிரைம் போலீசார் மூலம் தான் தோன்றிமலை  போலீசார் ஆய்வு செய்தனர் .. அப்போது மாதம் 8 ந் தேதிஅது நிலக்கோட்டை அருகே கொடைரோடு அருகே பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது பின்னர்அம்மையநாயக்கனூர் போலீசாரே தொடர்பு கொண்ட தான்தோன்றி மலை போலீசார் சிவசங்கரின் செல்போன் டவர் காட்டிய இடத்தில் ஏதோனும் அசம்பாவித  சம்பவங்கள்நடந்ததா என்று விசாரித்தனர்..அப்போது சாக்கு மூட்டையில் உலகில் நிலையில் ஒரு பெண்ணின் பிணத்தை கைப்பற்றி விவகாரத்தை அம்மையநாயக்கனூர் போலீசார் தெரிவித்தனர் ..அதையடுத்து  சிவசங்கரனை  பிடித்து தான்தோன்றிமலை போலீசார் விசாரணை  நடத்தினர்.. அப்போது அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்  பின்னர் அவரை கைது செய்து அம்மைய நாயக்கனூர்க்கு அழைத்து வந்தனர்..தொடர்ந்து தனது மனைவியின்  உடலை மூட்டையில் போட்டு வீசி சென்ற இடத்தை அடையாளம் காட்டினார் எப்படி வீசி சென்றார் என்று போலீசாரிடம் நடித்து காட்டினார் அவர் போலீசாரிடம் அளித்தவாக்குமூலத்தில் கூறியதாவது எனது மனைவிக்கும் ஒரு வாலிபருக்கும் கள்ளக்காதல் இருந்தது..இதையறிந்ததும் அவரை கண்டித்தேன் ஆனால் எனது மனைவி கள்ளக்காதலை கைவிட வில்லை ..அத்துடன் ஒரு வாலிபருடன் இணைந்து  டிக் டாக் வீடியோவும் வெளியிட்டார் இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது இதை அடுத்து அவரை கொலை செய்யதிட்டமிட்டேன் அதன்படி கடந்த மாதம் ஏழாம் தேதி இரவு வீட்டுக்கு சென்று நான் படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்த  சூரியகுமாரி இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தேன்..பின்னர் அவருடைய உடலை சாக்குமூட்டையில் கட்டி வைத்து விட்டு தூங்கினேன் ..பின்னர் அடுத்த நாள்காரில் அந்த சாக்குமூட்டை போட்டுகொடைரோடு அருகே ரெயில்வே நகர்பகுதிக்கு வந்தேன் ..பின்னர் அங்குள்ள காலி இடத்தில் அந்த மூட்டையை வீசிச் சென்றேன் மேலும் அப்பகுதியில் உள்ள ஒரு புதரில் எனது செல்போனை வீசிவிட்டு தான்தோன்றிமலைக்கு திரும்பிவிட்டேன்என் மீது யாருக்கும் சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக 9 ந் தேதி சூரியகுமாரி காணவில்லை என்று போலீசிலும் புகார் அளித்தேன் ஆனால் நான் கொலை செய்ததை போலீசார் எப்படியோ கண்டுபிடித்து விட்டனர் அதனால் நான் போலீசாரிடம் சிக்கிக் கொண்டேன் இவ்வாறு அவர் கூறினார் சாக்குமூட்டையில் சென்றதாக சிவசங்கரன் கூறியது அடுத்து யார் அந்த சாக்கு முட்டைக்கு தீ வைத்தது என்று போலீசார்  விசாரித்தனர் அப்போது சாக்கு மூட்டைஇருந்த இடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியதால் துர்நாற்றம் வீசியதால் 14 ந் தேதி யாரோ மர்ம நபர்கள் அதற்குத் தீ வைத்தது விசாரணையில் தெரியவந்தது.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!