Home செய்திகள் மதுரையில் பிறந்து சிலமணி நேரமே ஆன பெண் குழந்தை குப்பை தொட்டியில் இருந்து மீட்பு..

மதுரையில் பிறந்து சிலமணி நேரமே ஆன பெண் குழந்தை குப்பை தொட்டியில் இருந்து மீட்பு..

by ஆசிரியர்

கடந்த 31.01.2019 ம் தேதி திரு.காதர் என்பவரின் வீட்டின் முன்பு உள்ள குப்பைத்தொட்டியில் பிறந்த பெண் குழந்தை ஒன்று கிடப்பதாக B3-தெப்பக்குளம் ச&ஒ காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்தார் சார்பு-ஆய்வாளர் திருமதி.குமாரி உடனடியாக பெண்குழந்தையை மீட்டு, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்து பின்பு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு ( DISTRICT CHILD PROTECTION UNIT ) அவர்களிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

மேலும் குழந்தைகள் பாதுகாப்பது குழு உறுப்பினர் திருமதி.மாரீஸ்வரி என்பவர் கொடுத்த புகாரை பெற்று B3-தெப்பக்குளம் ச&ஒ காவல் நிலையத்தில் 317 IPC., படி வழக்கு பதிவு செய்து, புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் மேற்படி குழந்தையின் பெற்றோர்  யார் என கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS. உத்தரவிட்டுள்ளார்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!