Home செய்திகள் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ஆம்புலன்ஸ் அவசர ஊர்தி பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு..

எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ஆம்புலன்ஸ் அவசர ஊர்தி பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு..

by mohan

எஸ்டிபிஐ கட்சியின் ஆம்புலன்ஸ் அவசர ஊர்தி அர்ப்பணிப்பு நிகழ்ச்சி சங்கரன்கோவிலில் நடைபெற்றது. இதில் 31-வது ஆம்புலன்ஸ் அவசர ஊர்தி பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு அனைத்து சமூக மக்களுக்குமான ஆம்புலன்ஸ் சேவையை பொதுமக்களுக்காக அர்ப்பணித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக அரசு மருத்துவர் Dr.S.செந்தில் சேகர் M.B.B.S., D.C.H.,கலந்து கொண்டார். அப்போது அரசு மருத்துவர் செந்தில் குமார் தனது உரையில் கூறியதாவது: சங்கரன் கோவில் நகரில் இது முக்கிய நிகழ்வாகும்.

புதிய 2022 ஆம் ஆண்டின் முதல் நல்ல ஒரு நிகழ்வாக இதனை நான் பார்க்கிறேன். இஸ்லாமிய சகோதரர்கள் மக்களின் நலனுக்காக சுகாதாரத்துறைக்கு உரிய ஒத்துழைப்பை எப்போதும் வழங்கி வருகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் நன்றிக் கடன் பட்டுள்ளோம். ஆம்புலன்ஸ் சேவை என்பது சாதாரண விஷயமல்ல. இதற்காக முயற்சித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். மேலும் கொரோனா காலத்தில் இஸ்லாமியர்கள் செய்த சேவைகளை என்றும் மறக்க இயலாது. மக்களுக்கான இவர்களின் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் என கூறி தனது உரையை நிறைவு செய்தார். இந்நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர் அரசு மருத்துவர் செந்தில்குமார் அவர்களை தென்காசி மாவட்ட செயலாளர் S.இம்ரான் கான் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். சங்கரன் கோவில் கோமதி அம்பாள் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் N.பழனி செல்வம் M.SC., M.A., M.Phil.,M.ed., அவர்களை தென்காசி மாவட்ட பொருளாளர் A.செய்யது முஹம்மது அவர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். அண்ணாமலை ஹோட்டல் உரிமையாளர் AM.சுப்பையா ரமேஷ் அவர்களை மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.ஷேக் சிந்தா மதார் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். சங்கரன் கோவில் ஜமாத் கமிட்டியின் செயலாளர் S.நைனார் முகமது அவர்களை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனா சேனா சர்தார் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.எஸ்டிபிஐ வர்த்தக அணி செயலாளர் J.ஜாபர் அலி உஸ்மானி அவர்களை மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.ஹக்கீம் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com