Home செய்திகள் திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தின விழா போட்டிகள்;மாவட்ட காப்பாட்சியர் தகவல்..

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தின விழா போட்டிகள்;மாவட்ட காப்பாட்சியர் தகவல்..

by mohan

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டிகள் நடைபெற உள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம். 1,2 ,3ஆம் வகுப்பு “எனக்கு பிடித்த மலரும் இலையும்” 4,5,6 ஆம் வகுப்பு “நான் ரசித்த இயற்கைக் காட்சி” 7,8ஆம் வகுப்பு “குழந்தைகள் தின விழா” ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நவம்பர் 14 ஆம் தேதி காலை 10 மணியளவில் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறும். போட்டியில் வரைவதற்கும் தேவையான தாள்கள் அருங்காட்சியகத்தில் வழங்கப்படும். மாணவர்கள் தங்களுக்கு தேவையான அட்டை, எழுது பொருள்கள் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.மேலும் விவரங்களுக்கு 9444973246 என்கிற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com