Home செய்திகள் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை; மருத்துவர் செவிலியர்களுக்கு கண்காணிப்பாளர் ஜெஸ்லின் பாராட்டு..

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை; மருத்துவர் செவிலியர்களுக்கு கண்காணிப்பாளர் ஜெஸ்லின் பாராட்டு..

by mohan

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற கண்புரை அறுவை சிகிச்சையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு கண்காணிப்பாளர் ஜெஸ்லின் பாராட்டி பரிசளித்தார்.தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கண்புரை அறுவை சிகிச்சை நடைபெற்றது. கடந்த வெள்ளிக் கிழமை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 4 நோயாளிகளும் இன்று பூரண நலம் அடைந்து வீட்டிற்கு சென்றனர். இன்று 12 கண் புரை நோயாளிகள் கண் அறுவை சிகிச்சைக்காக உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் கண் மருத்துவமனையை பார்வையிட்டு நோயாளிகளின் நலன் குறித்து விசாரித்தார். மேலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையிலும் கண் அறுவை சிகிச்சையில் தொடங்கி சிறப்பான சேவை செய்யும் கண் மருத்துவர் ராஜலட்சுமி, மருத்துவர் ஆலிஸ் ரூத் மேரி, செவிலியர்களையும், கண் மருத்துவமனை பணியாளர்களையும் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் வெகுவாக பாராட்டினார். மேலும் கண் மருத்துவர் ராஜலட்சுமியின் சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி பரிசுகள் வழங்கி கண்காணிப்பாளர் ஜெஸ்லின் கெளரவித்தார். தென்காசி தலைமை மருத்துவமனையில் செயல்படுத்தப்படும் இந்த கண் சிகிச்சை வசதியினை தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்புரை நோயாளிகளும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அதிக அளவில் கண்புரை நோய் அறுவை சிகிச்சை செய்ய, அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கண் உதவியாளர்கள் ஒத்துழைக்குமாறு வலியுறுத்தினார்.இந்த நிகழ்வின் போது உறைவிட மருத்துவர் மருத்துவர் அகத்தியன், NHM நோடல் ஆபீசர் மருத்துவர் கார்த்திக், சிவகிரி மருத்துவர் இசக்கி, கண் உதவியாளர் ராமசுப்பிரமணியன் மற்றும் செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொரோனோ வார்டில் ஒரு வார காலம் பணிபுரிந்து தனிமைப் படுத்துவதற்காக விடுதிக்குச் செல்லும் செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் பாராட்டி வழியனுப்பி வைத்தார்.கடந்த வாரத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்குள் வந்ததால் பணி புரிந்த அனைத்து செவிலியர்களுக்கும் பரிசுகளும் வழங்கி கவுரவித்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!