29
வேலூர் மாவட்ட காவல்துறையில் துணை காவல் கண்காணிப்பாளராக கண்ணப்பன் பணிபுரிந்து வந்தார்.சில நாட்கள் நலமின்றி இருந்த அவர் ஓய்வில் இருந்தார்நேற்று முன்தினம் மீண்டும்உடல்நலம் பாதிக்கப்பட்டு போரூர் ராமச்சந்திரர மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கண்ணப்பனின் சொந்த ஊர் திண்டிவனம். தற்போது நேதாஜி நகர் சின்ன காஞ்சிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.வேலூர் தனியார் மருத்துவமனையில் கோவிட் சிகிச்சைக்கு பிறகு இருதய அறுவை சிகிச்சை நடந்தது.மருத்துவ விடுப்பில் இருந்த அவருக்கு இருதய வலி ஏற்பட்டதையெடுத்து ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின்பு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.அவருக்கு வேலூர் மாவட்ட காவல்துறையின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளனர்.
You must be logged in to post a comment.