நெல்லை அருகே ஆலங்குளம் பகுதியில் வாகனங்கள் நிறைந்து போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுகிறதுபோக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கும், வாகனங்கள் இடையூறின்றி செல்வதற்கும் ஏதுவாக ஆலங்குளம் போக்குவரத்து காவல்துறை சார்பில் சில அறிவுறுத்தல்கள் விளம்பரப்பலகையாக வைக்கப்பட்டுள்ளதுஅதன் படி பொதுமக்கள் அதிகமாக பழகும் காமராஜர் சிலை முதல் அண்ணாநகர் C.S.I சர்ச் வரை வாகனங்களை நிரந்தரமாக நிறுத்தி வைப்பதற்கும், விளம்பரப்பலகைககள் வைப்பதற்கும் அனுமதியில்லை. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போக்குவரத்து காவல் துறையின் அறிவிப்பினை மீறி சாலையில் வாகனம் நிறுத்தப்படும் நிலையும், மற்றும் விளம்பரப்பலகை வைக்கப்படும் நிலையும் தொடர்ந்தவாறே உள்ளது.இதனால் இப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.எனவே போக்குவரத்து நெரிசலை அகற்ற தேவையான நடவடிக்கைகளை போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும்,விதிமுறையை மீறி வைக்கப்படும் விளம்பரப் பலகைகளை அகற்றிடவும் வாகன ஓட்டிகள் மற்றும் இப்பகுதி சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.