Home செய்திகள்கீழக்கரை செய்திகள் திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் பழிக்கு பழியாக வாலிபர் கொலை…

திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் பழிக்கு பழியாக வாலிபர் கொலை…

by ஆசிரியர்

திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் பழிக்கு பழியாக வாலிபர் கொலை. அவனியாபுரம் பெரியார் நகர் பத்ர காளியம்மன் கோயில் வாசலில் தலையை தனியாக வைத்த கொலையாளிகள்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே பெரியார் நகர் உள்ளது .இங்கு இன்று மாலை ஐந்தரை மணி அளவில் அவ்வா என்ற முத்துச்செல்வம் (வயது 22 )என்ற வாலிபரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொன்றது.

ஏற்கனவே அவனியாபுரம் பாமக பிரமுகர் இளஞ்செழியன் கொலை வழக்கு மற்றும் அவரது தம்பி மாரி கொலை வழக்கு போன்றவற்றில் தொடர்புடையவர் அவா முத்துச்செல்வம். இன்னிலையில் பழிக்குப்பழியாக இக்கொலை நடைபெற்றது பரபரப்பாக பேசப்படுகிறது.

மேலும் செல்வம் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்ட கொலையாளிகள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். இதில் தப்பி ஓட முயன்றபோது தலை வயிற்று ஆகிவற்றில் அரிவாள் மற்றும் கத்தியால் குத்திய நிலையில் கீழே விழுந்த செல்வத்தின் தலை தனியாக அறுத்து எடுத்து வைத்து விட்டுச் சென்றனர்.

இதனால் இப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது பழிக்குப்பழியாக தொடரும் நிகழ்ச்சி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!