Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை இளைஞர் படுகொலை போலீஸ் தீவிர விசாரணை..

கீழக்கரை இளைஞர் படுகொலை போலீஸ் தீவிர விசாரணை..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சங்குவெட்டி தெருவை சேர்ந்த செய்யது முகம்மது கபீர் மகன் ரிஸ்வான் வயது 42 இரவு கத்தியால் வயிற்றுப்பகுதியை குத்தி குடல் வெளியே தள்ளிய நிலையில் மர்மமான முறையில் கொலை செய்து ரத்தவெள்ளத்தில் அவர் வீட்டு அருகில் கிடந்தார்.

காவல்துறைக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையில் ராமநாதபுர மாவட்ட குற்றவியல் துணை கண்காணிப்பாளர் திருமலை (கீழக்கரை பொறுப்பு) கீழக்கரை ஆய்வாளர் செந்தில்குமார்,  சிறப்பு சார்பு ஆய்வாளர் முனியாண்டி, கீழக்கரை சரக தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் செல்வராஜ், கீழக்கரை சரக குற்றவியல் சார்பு ஆய்வாளர் சிவலிங்கப் பெருமாள், காவலர் முனீஸ்வரன், தனிப்பிரிவு காவலர் சேகர், உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் தீவிர விசாரணை நடத்தினார்.

பின்பு பிரேதத்தை கைப்பற்றி கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதைப் பற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கேட்டபோது குற்றவாளியை வெகு விரைவில் கைது செய்வோம் என்று கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!