16
ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநிலத்தை ஒருங்கிணைத்து முன்மாதிரியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஆந்திராவை இருப்பிடமாக கொண்ட 42 லட்ச ரேசன் அட்டைதாரர்கள், அண்டை மாநிலமான தெலங்கானாவின் ஐதராபாத் பகுதி ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்தத் திட்டத்தின் மூலம் இரண்டு மாநிலத்தவர்களும் தற்போது குடியிருக்கும் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளிலேயே பொருட்களை வாங்கி வருகின்றனர். இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதிமுதல் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.