இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (12.03.2019) மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இந்திய தேர்தல் ஆணைய மூலம் எதிர்வரும பொதுத் தேர்தலுக்காக இராமநாதபுரம் மாவட்டத்திற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பரிசோதிக்கும் விதமாக ‘மாதிரி வாக்குப்பதிவு” நடைபெற்றது.
லோக் சபா தேர்தல் பணிகளில் பயன்படுத்துவதற்காக வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை இயந்திரம் வரப்பெற்று கடந்த 03.10.2018 முதல் 10.10.2018 வரை முதல் நிலை சரிபார்த்தல் நடத்தப்பட்டு இராமநாதபுரம் மாவட்ட வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிட்டங்கியில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணைய மூலம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரம் ஆகியவற்றின் செயல்திறனை உறுதி செய்வதற்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 09.03.2019 முதல் முதனிலை சரிபார்த்தல் நடைபெற்றது. கூடுதலாக வரப்பெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்த்தல் நிறைவேற்றப்பட்டதையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல் படி வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 5 சதவீத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளின் விருப்பப்படி தேர்வு செய்யப்பட்டு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை, வாக்காளர் சரிபார்ப்பு தணிக்கை இயந்திரத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கை குறித்து அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் 24 மணிநேர மாவட்ட தேர்தல் தொடர்பு மைய செயல்பாடு குறித்து நேரில் ஆய்வு செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முதல் பரிசோதனை பொறுப்பு அலுவலர் (உதவி ஆணையர் கலால்) சி.ரவிச்சந்திரன் உள்பட அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
You must be logged in to post a comment.