9
mkpஇராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலம் பேரூராட்சி 10,11,12 வது வார்டுகளில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர். காவிரி கூட்டு குடிநீர் திட்ட இணைப்பு வழங்கப்பட்டும் இப்பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி சரிவர கிடைப்பதில்லை. பேரூராட்சியில் பல முறை பொதுமக்கள் முறையிட்டும் உரிய தீர்வு கிடைப்பதில்லை. தற்பொழுது பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர்.கோரிக்கை மனுவை இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன், இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா ஆகியோர் வழங்கினார்கள்.பேரூராட்சி சார்பாக விரைவில் குடிநீர் பிரச்சினையை சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் கூறினார்கள்.
You must be logged in to post a comment.