Home செய்திகள் இராமநாதபுரம் மாவட்ட மக்கள்பாதை இயக்கம் சார்பாக ஏழை எளிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கல்.

இராமநாதபுரம் மாவட்ட மக்கள்பாதை இயக்கம் சார்பாக ஏழை எளிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கல்.

by mohan

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் தங்கச்சிமடம் கிராமம் அய்யன்தோப்பு, முஸ்லீம்தெரு பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மக்கள்பாதை இயக்கம் சார்பாக நிவாரணப் பொருட்கள் இன்று 04.05.2020 வழங்கப்பட்டது.ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இப்பகுதியில் உள்ள ஆதரவற்றோர் ஏழை எளிய குடும்பங்கள் உதவி தேவை என மக்கள்பாதைக்கு தங்களின் தேவைகளை கூறினர், அதனடிப்படையில் மக்கள்பாதை பொறுப்பாளர்கள் நேரடி களஆய்வு செய்து மக்கள்பாதை இயக்கத்தின் வழிகாட்டி  அறிவுறுத்தலின் பேரில் நிவாரண பொருட்களாக அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் மக்கள்பாதை மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் இராமு, தங்கச்சிமடம் பொறுப்பாளர் அந்தோணிதினா, தகவல் தொழில்நுட்ப பிரிவு அக்காள்மடம் ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கப்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!