Home செய்திகள் கீழக்கரையில் 03/03/2019 அன்று குழந்தைகளுக்கான மாபெரும் இருதய பரிசோதனை முகாம்..

கீழக்கரையில் 03/03/2019 அன்று குழந்தைகளுக்கான மாபெரும் இருதய பரிசோதனை முகாம்..

by ஆசிரியர்

கீழக்கரையில் 03/03/2019 அன்று கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனையும் இணைந்து மாபெரும் குழந்தைகள் மருத்து பரிசோதனை முகாம் நடத்துகின்றனர். இம்முகாம் கீழக்கரை நாடார் பேட்டையில் உள்ள நாடார் பள்ளி வளாகத்தில் காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை நடைபெற உள்ளது.

இதுபற்றி கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம் கூறுகையில், “கடந்த வருடமும் இம்முகாம் சிறப்பாக நடைபெற்று பல் வேறு குழந்தைகள் பயனடைந்தனர். இந்த வருடம் இன்னும் பல குழந்தைகள் பரிசோதனை முதல் தேவையான குழந்தைகளுக்கு ஆபரேசன் வரை செய்யும் வண்ணம் மாவட்ட அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  ஆகையால் அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டு கொள்கிறோம்” என்றார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!