Home செய்திகள் 60 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது

60 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது

by mohan

மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  உத்தரவுப்படி விளக்குத்தூண்  ஆய்வாளர் .லோகேஸ்வரி ரோந்து பணியில் இருந்த போது தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக அவருக்கு கிடைத்த தகவலை பெற்று, மதுரை டவுன் கான்பாளையம் 3வது தெரு சந்திப்பு, அண்ணாமலை சரக்குக்கடை அருகே புகையிலை மூட்டைகள் இருந்ததை கண்டுபிடித்தார். மேலும் இது தொடர்பாக விசாரணை செய்ததில் மணிகண்டன்  என்பது தெரியவந்தது. எனவே மணிகண்டனை கைது செய்து அவரிடமிருந்து 60 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பணம் ரூபாய்.1,89,630/- ஆகியவற்றை கைப்பற்றி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் மதுரை மாநகர் முழுவதும் தீவிர சோதனை நடத்த காவல் ஆணையர்  உத்தரவிட்டுள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!