Home செய்திகள் அவனியாபுரத்தில் போலீஸ்காரர் மனைவியிடம் 25 பவுன் நகை பறிப்பு- ஒருவர் கைது .

அவனியாபுரத்தில் போலீஸ்காரர் மனைவியிடம் 25 பவுன் நகை பறிப்பு- ஒருவர் கைது .

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் அருகே உள்ள மாநகராட்சி காலனி பகுதியில் வசித்து வருபவர் முத்துராமலிங்கம் இவர் மதுரை மாநகர் காவல் துறையின் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முத்து(வயது 30)இவர் நேற்று இரவு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் போலீஸ்காரர் மனைவி முத்துவிடம் இருந்து 25 பவுன் நகையை பறித்துவிட்டு டூவீலரில் தப்பிச் சென்றுள்ளனர்.மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் எதிர்பாராதவிதமாக எதிரே வந்த வாகனத்தில், வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களின் இரு சக்கர வாகனம் மோதி கீழே விழவே அருகில் இருந்தவர்கள் ஒரு நபரையும் டூவீலரையும் பிடித்துக்கொண்டனர்.டூவீலரில் வந்த மற்ற இருவர் தப்பித்து ஓடிவிட்டனர் இதுகுறித்து அவனியாபுரம் காவல் துறையினருக்கு தகவல் தரவே சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா தலைமையில் போலீசார் விரைந்து வந்து பிடிபட்ட நபரையும் மற்றும் டூவீலர்கள் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்‌.பிடிபட்ட நபர் மதுரையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ஆகாஷ் என்ற விஷம் என்பது தெரியவந்துள்ளது.மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய இரு நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர் இதில் நகையை பறிகொடுத்த முத்துவின் சகோதரர் மாரிஸ்வரனும் அவனியாபுரம் காவல் துறையில் காவலராக பணிபுரிந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.போலீஸ்காரர் குடும்பத்தினரிடமே இவ்வாறு வழிப்பறி செய்தது அவனியாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!