Home செய்திகள் மதுரையில் சங்கமம் திரைப்படம் போல் பரத கலைஞர் ஆடி கொண்டிருக்கும் போதே உயிர் பிரிந்த சோகம்.

மதுரையில் சங்கமம் திரைப்படம் போல் பரத கலைஞர் ஆடி கொண்டிருக்கும் போதே உயிர் பிரிந்த சோகம்.

by mohan

பங்குனி திருவிழாவை முன்னிட்டு மதுரை வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றுது.இந்த விழாவில் பரதன் கரகாட்டம் ஒயிலாட்டம் மயிலாட்டம் என பல்வேறு நடன நிகழ்ச்சிகள் வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் இந்த பூச்சொரிதல் விழாவில் பரத கலைஞர் காளிதாஸ் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் எல்லாம் வல்ல தாயே என்ற பாடலுக்குதான் தான் கற்று கொடுத்த மாணவர்களுடனும் சங்கமம் திரைபடத்தில் தனது மகனுடன் ஆடுவது போன்று தனது மகள் மற்றும் பரத மாணவ, மாணவிகளுடன் நடனம் ஆடிக்கொண்டிருந்த நேரம் திரைப்படத்தில் வருவது போன்றே நெஞ்சை பிடித்து சேரில் அமர்ந்தார்.பாடல் முடியும் வரை விடாமல் நடனம் ஆடிய மாணவ, மாணவிகள் மற்றும் அவரது மகள் காளிதாஸ் அமர்ந்த சேர் நோக்கி வந்தபோது பெரும் சோகம் அவர் உயிர் பிரிந்திருந்தது.இதை பார்த்த அவரது மகள், நடன கலைஞர்கள் மற்றும் நிகழ்ச்சியை காண வந்த அனைவரும் கண்ணீர் பெருக்குடன் அவரது உடலை ஆம்புலன்சில் ஏற்றி வைத்தனர்.இறந்த பரதநாட்டியக் கலைஞர் காளிதாஸ்க்கு 54 வயதாகிறது. இளம் வயதிலிருந்தே பரதநாட்டிய மீது அதிக ஆர்வம் கொண்டதால் அவர் சிறு வயது முதல் பரதநாட்டியம் ஆடி வருகிறார். பரத நாட்டியாலய பள்ளியும் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ள நிலையில் மகன் விருதாக மிருதங்க வித்துவான், மகள் பரத கலைஞர், மனைவி கர்நாடக சங்கீத ஆசிரியை என கலைக்காக வாழ்ந்த குடும்பம் என உறவினர் தெரிவித்தனர்.இவர் ஆடல் வல்லான் என்ற விருது, கெளரவ டாக்டர் பட்டம், 1000க்கும் மேற்பட்ட சீல்டு, பதக்கம் என வாங்கிய காளிதாஸ் வரும் வருடத்தில் கலைமாமணி விருது கிடைக்கும் என தனது நண்பர்களிடம் தெரிவித்தார் என அவரது நண்பர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.புகழ்பெற்ற தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் நிகழ்ச்சியில் பரதம் ஆடிய போது இவரது உயிர் பிரிந்த சம்பவம் கோவிலில் நிகழ்ச்சியை காண வந்த பக்தர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!