Home செய்திகள் ஓபிஎஸ், இபிஎஸ் பதவி விலகி, சசிகலா அதிமுக தலைமையேற்க வேண்டும்.

ஓபிஎஸ், இபிஎஸ் பதவி விலகி, சசிகலா அதிமுக தலைமையேற்க வேண்டும்.

by mohan

 மதுரை அனைத்துமக்கள் நீதிக் கட்சியின் சார்பில், தென் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நிறுவனத் தலைவர் ஓ. யோசன் தலைமை தாங்கினார்.பின்னர் செய்தியாளர் சந்திப்பில்:அதிமுகவை தனது சுயநலத்திற்காக அழித்துக் கொண்டு தமிழகத்திற்கு வர வேண்டிய நல்ல திட்டங்களையும் மத்திய அரசு நிதியையும் பெற்று தராமல் ,அதிமுக என்ற கட்சியை அழித்துவரும் ஓ.பன்னீர்செல்வமும் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுக தொண்டர்கள் நலன் கருதி கட்சியில் பதவியில் இருந்து விலகவேண்டும், அதிமுகவை வழிநடத்த ஆளுமை திறன் கொண்ட வி.கே. சசிகலா தலைமை ஏற்க வேண்டும்என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டம், நீதிக் கட்சியின் நிறுவன தலைவர்ஓ. யோசன் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் எம். ஆர்.சி. செல்வம் மாநில துணை பொதுச் செயலர் சரவணன் என். எஸ். சரவண பாலாஜி செய்தார் என் .டி. ராஜன் மாநில பொருளாளர் ஏ. நாகராஜ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com