Home செய்திகள் கிழவனேரி கிராமத்தில் மரமும் மனிதனும் அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா.

கிழவனேரி கிராமத்தில் மரமும் மனிதனும் அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா.

by mohan

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், கிழவனேரி கிராமத்திலுள்ள பெரிய கண்மாயின் கரையில் ஆலமரம் :3, அரசமரம் : 3, அத்திமரம் : 3, இச்சிமரம் : 1 மற்றும் இலுப்பை : 2 உள்பட 12 மரக்கன்றுகள் மரமும் மனிதனும் அமைப்பின் சார்பில் நடப்பட்டன. மரக்கன்றுகள் நடும் இந்நிகழ்வில், மரமும் மனிதனும் அமைப்பின் நிறுவனரும், புதுக்கோட்டை மாவட்டம் மாங்குடி அரசு உயர்நிலைப்பள்ளியின் தமிழாசிரியருமான முகம்மது ஆஸிம், கிழவனேரி ஊராட்சி மன்றத் தலைவர் கார்த்திக், ஊராட்சி செயலர் சமயசஞ்சீவி, கிராம நிர்வாக அலுவலர் கண்ணன், ஊர்ப்பொதுமக்கள், இளைஞர்கள், பணித்தளப் பொறுப்பாளர்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com