Home செய்திகள் தொடரும் சாலை விபத்து உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் கோரிக்கை.

தொடரும் சாலை விபத்து உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் கோரிக்கை.

by mohan

மதுரை பழங்காலத்தின் காளவாசல் VOC .பாலம் நேரு நகர் பிரதான சந்திப்பில், தினசரி விபத்துக்கள் நடந்து கொண்டே இருக்கிறது .மேலும், போக்குவரத்து நெரிசலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதில், ஒவ்வொருநாளும் விபத்து ஏற்பட்டு காயம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. சில நேரங்களில் அவசர கால ஊர்திகளுக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது .அந்த அளவிற்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இந்த நிலையில், இன்று மாலை இரு சக்கர வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில், இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் காலில் பலத்த காயம் ஏற்பட்டு 108 அவசர கால ஊர்தி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இருசக்கர வாகனத்தில் மோதிய கார் நிறுத்தாமல், தப்பி ஓடியது இதை பார்த்த அப்பகுதி மக்கள் எஸ் எஸ் காலனி காவல் துறைக்கு தகவல் கொடுத்து அவை உடைந்து கிடந்த நம்பர் பிளேட்டை வைத்து தப்பி ஓடிய கார் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில்: இப்பகுதியில் தினசரி அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது எனவும், மேலும் ,பள்ளிகள் இல்லாத நேரத்திலேயே இந்த அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இங்கு இரண்டு மூன்று பள்ளிகள் செயல்படுகிறது. இதனால் ,அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும், இதனால் விபத்துக்கள் ஏற்படும் ஐயம் தெரிவிக்கின்றனர். இதனை சரிசெய்ய போக்குவரத்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது , என, வேண்டுகோள் விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com