
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏழு மாதங்களுக்குப் பிறகு மனு பெரும் நாள் இன்று தொடக்கம் முதல் நாளே ஒருவர் தற்கொலை முயற்சி தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்டனர் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மனு பெரும் நிகழ்வானது இன்று முதல் தொடங்கப்பட்டது ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாவட்ட ஆட்சியாளர் நேரடியாக மனு பெற்று பரிசீலனை செய்து அதற்கான தீர்வினை செய்துவந்தார் கொரானா தொற்று காரணமாக கடந்த ஏழு மாதங்களாக பொதுமக்களிடம் நேரடியாக மனுக்கள் பெறப்படவில்லை இந்த நிலையில் அக்டோபர் 4 முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாவட்ட ஆட்சியாளர் நேரடியாக மனுக்களை பெற்று அதற்கான தீர்வினை காண ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர் இந்த நிலையில் மதுரை மாவட்டம் பேரையூர் தாலுக்கா சுப்புலாபுரம் பகுதியை சேர்ந்த ராம்குமார் வயது 24 மாற்றுத்திறனாளியான இவர் மதுரை மாவட்ட ஆட்சியாளர் கூடுதல் கட்டடத்தில் உள்ள ஐந்தாவது மாடிக்கு சென்று தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் என கூச்சலிட்டு உள்ளார் இதைப்பார்த்த பொதுமக்கள் மற்றும் போலீசாரும் அவர் பேசி தீர்த்துக்கொள்ளலாம் உடனடியாக கீழே இறங்கச் சொல்லி கூச்சலிட்டனர் எழிலும் இறங்க மறுத்துவிட்டார் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்துக்கு விரைந்த தல்லாகுளம் மற்றும் மீட்பு குழுவினர் மதுரை மாவட்ட ஆட்சியாளர் கூடுதல் கட்டிடத்தில் உள்ள ஐந்தாவது மாடிக்கு சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் எனினும் அவர் இறங்க மறுக்கவே சாதுர்யமாக செயல்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் அவரைக் கீழே குதிக்க விடாமல் லாவகமாக பிடித்தனர் முதற்கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினைக்காக தற்கொலை முயற்சி ஈடுபட்டதாக புகார் கொடுத்தும் காவல்துறை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் உடனடியாக எனக்கு தீர்வு கிடைக்கவேண்டும் கூறியுள்ளார் மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மனு நாள் தொடங்கப்பட்ட முதல் நாலே ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது…
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.