Home செய்திகள் திருமங்கலத்தில் பொதுகோவிலினுள் வைத்த விநாயகர் சிலையை இரவில் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் அகற்றி , கண்மாயில் வீசியதால் இந்து முன்னணியினர் ஆத்திரம்

திருமங்கலத்தில் பொதுகோவிலினுள் வைத்த விநாயகர் சிலையை இரவில் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் அகற்றி , கண்மாயில் வீசியதால் இந்து முன்னணியினர் ஆத்திரம்

by mohan

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் உள்ள செங்குளம் பகுதியில், நேற்று இரவு நாலரை அடி உயரம் உள்ள விநாயகர் சிலை, அக்கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலினுள் வைக்கப்பட்டிருந்ததை வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் , இரவோடு இரவாக அருகில் உள்ள கண்மாய் நீரில் கரைத்தனர்.அதனை தொடர்ந்து மதுரை மாவட்ட இந்து முன்னணி மாவட்ட தலைவர் அழகர்சாமி முன்னிலையில் , இந்து முன்னணியினர் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கண்மாய் நீரில் கரைத்த விநாயகர் சிலையை ஒப்படைக்க கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .தமிழக அரசு ,விதிமுறையை மீறி வைத்த விநாயகர் சிலையை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் காவல்துறை, வருவாய்துறையினரும் , பொது கோவிலில் வைக்கப்பட்ட விநாயகர் சிலையை அகற்றி , கண்மாய் நீரில் தூக்கி வீசப்பட்டதைக் கண்டித்து, இந்து முன்னணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், வேறுவழியின்றி காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் புதிதாக சிலையை விலைக்கு வாங்கி , இந்து முன்னணியினரிடம் ஒப்படைத்தனர்.அதனைத் தொடர்ந்து புதிய சிலையை பெற்ற இந்துமுன்னணியினர் , செங்குளத்தில் பொது கோவிலில் வைத்து பூஜிக்கப்பட்டு வருகின்றனர் .அரசு அதிகாரிகளே விநாயகர் சிலையை விலைக்கு வாங்கி இந்து முன்னணியினரிடம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com