ராஜபாளையத்தில் விலையில்லா வேட்டி சேலை உற்பத்தி செய்யும் நெசவாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் .

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அம்பல புளி பஜார் பகுதியில் அனைத்து நெசவாளர்கள் கூட்டுறவு சங்க நெசவாளார்கள் சார்பில் விலையில்லா வேஷ்டி சேலை உற்பத்தி செய்யும் நெசவாளர்கள் அரசு ஆணைக்கிணங்க 2000 பிடல் தரி நெசவாளர்களுக்கு பாவு நூல் வழங்கப்படாமல் இருப்பதை கண்டித்தும் உடனடியாக பாவு வழங்க கோரி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்பாவு நூல் வழங்காததால் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர் ஆகையால் தமிழக அரசு உடனடியாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்..

செய்தியாளர் வி காளமேகம்