Home செய்திகள் அவனியாபுரத்தில் கொரானா தடுப்பூசி மருந்து சிறப்பு மருத்துவ முகாம் பாஜக சுகாதாரதன்னார்வ குழு தலைவர் ஆய்வு.

அவனியாபுரத்தில் கொரானா தடுப்பூசி மருந்து சிறப்பு மருத்துவ முகாம் பாஜக சுகாதாரதன்னார்வ குழு தலைவர் ஆய்வு.

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தடுப்பூசி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் மதுரை மாநகராட்சி சார்பில் நடைபெறும் தடுப்பூசி போடும் பணியில் கோவாக்சின்.கோவிட்சீல்டு இரண்டு தடுய்பூசிகள் போடப்படுகின்றன.இவற்றை ஆய்வு செய்ய சுகாதார தன்னார்வ குழு தலைவர் டாக்டர் சரவணன் பார்வையிட்டார் மாவட்ட பொதுச்செயலாளர் சுந்தர் மண்டல் தலைவர் கருப்பையா மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்டாக்டர் சரவணன் குறிப்பிடுகையில் பிரதமர் மோடி அறிவுறுத்தலின்படி சுகாதாரத்துறை சார்பில் கொரானாதடுப்பு முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது மூன்றாவது அறை வரும்முன் மக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கையாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது பிறநாடுகளில் ஒரு தடுப்பூசி மட்டுமே கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் மட்டும் காட்சியின் கோவிட்சீல்டு கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் குழந்தைகளுக்கு தடுப்பூசி சொட்டு மருந்தாக வழங்குவது குறித்து அரசு தீவிரமாக ஏற்பாடு செய்து வருகிறது என்று டாக்டர் சரவணன் குறிப்பிட்டார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com