Home செய்திகள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 20 வயது இளைஞர் போக்சோ வழக்கில் கைது.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 20 வயது இளைஞர் போக்சோ வழக்கில் கைது.

by mohan

 திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட வெள்ளிமலை தெருவை சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் கார்த்தி (20). இவன் இப்பகுதியில் கிடைக்கும் கூலி வேலைகளை செய்துவந்துள்ளான். இதே பகுதியில் உள்ள திருமுருகன் தெரு செங்குன்றம் நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் – லட்சுமி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) தம்பதியினர் சிறிய அளவில் பலசரக்கு கடை ஒன்றை நடத்தி வருகின்றனர் இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.இந்த நிலையில் பாலசுப்பிரமணியம் – லட்சுமி நடத்திவந்த கடைக்கு அடிக்கடி வருவதை கார்த்தி வழக்கமாக வைத்துள்ளான். கடையில் தனது பெற்றோர்களுடன் ஏழு வயது சிறுமியும் இருப்பது வழக்கம் சில நேரங்களில் பெற்றோர்கள் இல்லாத பொழுதும் ஏழு வயது சிறுமி மட்டும் தனியாக கடையில் அமர்ந்திருப்பார் இதனை அறிந்த கார்த்தி சிறுமி தனியாக உள்ள நேரமாய் பார்த்து கடைக்கு வருகை புரிந்து சிறுமியிடம் பலமுறை தவறாக நடந்துள்ளான் இதுபோன்று கடந்த ஒரு மாத காலமாகவே சிறுமியிடம் தனது சில்மிஷ வேலைகளை அரங்கேற்றியுள்ளான் கார்த்தி. இதனைப் பற்றி ஒன்றும் அறியாத சிறுமியும் பெற்றோர்களிடம் எதுவும் கூறாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி காலை எட்டு மணி அளவில் கார்த்தி கடைக்கு வந்துள்ளான் அந்த நேரத்தில் கடையில் பெற்றோர்கள் யாரும் இல்லாது ஏழு வயது சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ள நிலையில் கார்த்தி இந்த ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனைத் தொடர்ந்து வலியால் துடித்த சிறுமி தனது தாய் லட்சுமியிடம் நடந்தவற்றை கூறியுள்ளார் இதனைக் கேட்டு அதிர்ந்து போன லட்சுமி உடனடியாக திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அணுகி அங்கு கார்த்தி மீது புகார் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து உடனடியாக லட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் கார்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் லட்சுமி அளித்த புகார் உறுதியானது இதனையடுத்து குற்றவாளி கார்த்தி போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டான்.மேலும் தற்போது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு குழந்தைகள் மீது பெற்றோர்கள் எப்போதும் தனி கவனம் செலுத்தவேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாக உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!