மதுரையின் அட்சய பாத்திரம் மற்றும் மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் 87 ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரையில் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ரோட்டோரத்தில் இருப்பவர்களுக்கு மதிய உணவு இன்று வழங்கப் பெற்றது நிகழ்ச்சிக்கு எஸ் எஸ் காலனி சத்சங்கம் செயலாளர் ஸ்ரீராமன் தலைமை தாங்கினார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப் பெற்று விழாவில் சிறப்பு விருந்தினராக காஞ்சி சங்கர மடம் மதுரை கிளையின் செயலாளர் ஆடிட்டர் சுந்தர் தலைமை வகித்து மதிய உணவினை வழங்கினார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை நகர் முழுவதும் இன்று 500 பேருக்கு உணவு வழங்கப் பெற்றது மதுரையின் அட்சயபாத்திரம் அமைப்பின் சார்பாக கடந்த 81 நாட்களாக மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரையின் அட்சயபாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.