Home செய்திகள் மதுரை சிந்தாமணி அருகே சட்டவிரோதமாக 2 ரைஸ்மில்களில் பதுக்கி வைக்கப்பட்ட 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து மில்லுக்கு சீல்.

மதுரை சிந்தாமணி அருகே சட்டவிரோதமாக 2 ரைஸ்மில்களில் பதுக்கி வைக்கப்பட்ட 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து மில்லுக்கு சீல்.

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி அய்யனார்புரம் சாஸ்தா ரைஸ்மில் மற்றும் கல்லம்பல் பகுதியில் உள்ள தனலெட்சுமி ரைஸ்மில்லில் , சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் வருவாய்த்துறையினர் மற்றும் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் கொண்ட தனிப்படை அங்கு சென்றபோது ரைஸ் மில்லில் இருந்தவர்கள் தலைமறைவானதுடன் , ரைஸ் மில்லில் பூட்டி சீல் வைத்தனர்.பனையூர் கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு இடங்களிலும் 20 டன் ரேஷன் அரிசியை மாவாக அறைப்பதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனடிப்படையில் 20 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர் ரைஸ்மில்லை பூட்டி சீல் வைத்தனர். தொடர்ந்து தலைமறைவான உரிமையாளர் போலீசார் தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com