Home செய்திகள் மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் அசாமில் பணியில் இருந்தபோது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் .

மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் அசாமில் பணியில் இருந்தபோது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் .

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி இவரது மகன் கதிர்வேல் (வயது 36) இவருக்கு திருமணமாகி சண்முகப்பிரியா(வயது 25)என்ற மனைவியும் .ஹனிஸ்க் (வயது 7)மற்றும் பார்த்திவ் (வயது 3) ஆகிய 2 மகன்கள் உள்ளனர் . கதிர்வேல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அசாமில் மழையில் பணியில் இருந்தபோது ஏற்பட்ட நிலச்சரிவில் கதிர்வேல் மரணமடைந்தார்.இதுகுறித்து தகவலறிந்து வந்த ராணுவ அதிகாரிகள் அவரது உடலை மீட்டு அசாம் தலைமையகத்துக்கொண்டுஅங்கிருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வந்து சென்னையிலிருந்து மதுரை கொண்டு வரப்பட்டதுமதுரை தேசிய மாணவர் படை சுபேதார் பிரமோத் சார்பில் தேசிய கொடி பொருத்தப்பட்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது பின்னர் மாவட்ட ஆட்சியர் அணி சேகர் மதுரை மாநகர் காவல் துணைஆணையர் துரை.மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன். மதுரை விமான நிலையத்தினர் பாபுராஜ்.விமான நிலையம் மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டன்ட் உமாமகேஸ்வரன் துணை கமாண்டன்ட்மற்றும் விருதுநகர் மாவட்ட ஜான்ஸ் நல சங்கம் சார்பில் ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்பின்னர் கதிர்வேல் உடல் மதுரை விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கொண்டு செல்லப்பட்டது .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com