Home செய்திகள் மதுரை முன்னாள் எம்பி தனது அலுவலகத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் : உயர்நீதிமன்றம்.

மதுரை முன்னாள் எம்பி தனது அலுவலகத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் : உயர்நீதிமன்றம்.

by mohan

சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவி காலம் முடிந்த பின்பு அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள தனது அலுவலகங்கள் உடனடியாக காலி செய்ய வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் மதுரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை உடனடியாக காலி செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பி்த்துள்ளது.மதுரை தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு. நான் மதுரைதொகுதியின் முன்னாள் MP ஆக இருந்தேன். கடந்த சட்டமன்ற தேர்தலில் நான் மதுரை கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட்டேன்.இந்நிலையில் கடந்த மார்ச் 2021 அன்று , எனது அலுவலகத்தில் பணம் வைத்திருப்பதாக பொய் புகார் கொடுத்ததன் பேரில் மதுரை தல்லாகுளம் போலிஸ்சார், தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளும் சேர்ந்து எனது அலுவலகத்தில் சோதனை செய்தார்கள். மாநகராட்சி ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த கட்டிடத்தில் வாடகைக்கு இருப்பதால் தேர்தல் நன்னடத்தை விதிகளின் படி கட்சிப்பணிக்கு அலுவலகத்தை தற்போது பயன்படுத்தக்கூடாது எனக்கூறி அலுவலகத்தை மாநகராட்சி அதிகாரிகள் அவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது .தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் இன்றுவரை எனது அலுவலகம் திறக்க அனுமதிக்கப்படாமல் உள்ளது . எனவே, எனது அலுவலகத்தை திறக்க மாவட்ட ஆட்சியர் மாநாகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி இருந்தார்..இந்த மனு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வீர கதிரவன் மனுதாரர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அலுவலக பணிக்காக மாநகராட்சி சார்பில் இடம் ஒதுக்கப்பட்டது. தற்போது அவரது பதவி காலம் முடிந்துவிட்டது. இருந்தும் இரண்டு வருடங்களாக தொடர்ந்து மாநகராட்சி கட்டிடத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து நீதிபதி மனுதாரர் தற்போது எந்த பதவியிலும் இல்லை சட்டமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவி காலம் முடிந்த பின்பு அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்து காலி செய்திருக்க வேண்டும் ஆனால் அவரது பதவியை தவறாக பயன்படுத்தி அலுவலகத்தை தனது கட்டுபாட்டில் வைத்திருந்து உள்ளார்.பொறுப்பான பதவியில் இருந்தவர்கள் இதுபோன்று எவ்வாறு செயல்படலாம் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது ஏற்றுக் கொள்ளக் கூடிய விஷயம் இல்லை. எனவே மனுதாரர் மதுரை மாநகராட்சியின் சொந்தமான கட்டிடத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும். வாடகை பாக்கி இருந்தால் மாநகராட்சி அதிகாரிகள் மனுதாரரிடம் முழுமையாக வசூல் செய்ய வேண்டும் மேலும் மனுதாரருக்கு சொந்தமான பொருட்கள் அங்கு இருந்தால் அதனை எடுத்துக் கொள்வதற்கும் அனுமதி வழங்கி மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!