Home செய்திகள் மதுரையில் காப்பகத்தில் குழந்தைகளை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி மறியல்: 30 பேர் கைது:

மதுரையில் காப்பகத்தில் குழந்தைகளை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி மறியல்: 30 பேர் கைது:

by mohan

மதுரை இதயம் காப்பகத்தில் நடைபெற்ற குழந்தை விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள காப்பக உரிமையாளர் சிவக்குமார் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்பட்ட அனைவர் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் , மதுரை புதூர் தாமரை தொட்டி அருகில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கோபிநாத், செயலாளர் செல்வா, இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பாலமுருகன் மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் உள்ளீட்டோர் மறியலில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!