Home செய்திகள் ராஜபாளையம் பச்சை காலனி பகுதியில் ராணுவ வீரர் தனது கழுத்தை அறுத்து தற்கொலை வடக்கு காவல் நிலைய போலிசார் விசாரணை .

ராஜபாளையம் பச்சை காலனி பகுதியில் ராணுவ வீரர் தனது கழுத்தை அறுத்து தற்கொலை வடக்கு காவல் நிலைய போலிசார் விசாரணை .

by mohan

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செண்பகத்தோப்பு சாலையில் அமைந்து உள்ள பச்சை காலனி பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன் வயது 42 இவருக்கு திருமணமாகி தேவி என்ற மனைவியும் ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளது பாண்டியராஜன் ராணுவத்தில் பணியாற்றி வந்த நிலையில் அவருக்கு கண் பார்வை குறைந்து உள்ளதால் கடந்த மாதம் ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று வீட்டில் இருந்துள்ளார் இந்த நிலையில் மேலும் மற்றொரு கண் பார்வையில் குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறதுஇதன் காரணமாக பார்வை இழந்து வாழ இயலாது என்ற நிலைமை அவர் மனதை வாட்டி வந்துள்ளது இதையடுத்து தன் வீட்டில் வைத்து பிளேடால் கழுத்து மற்றும் கை பகுதியில் அறுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார் உடனடியாக மனைவி தேவி உறவினர்களை அழைத்து ராஜபாளையம் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் பரிசோதனை செய்து தெரிவித்துள்ளனர் ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளார் அந்த கடிதத்தில் குழந்தைகள் இருவரையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் என் சாவுக்கு வேறு யாரும் எந்த காரணமும் இல்லை எனது பார்வை குறைபாடு பார்வை இல்லாமல் வாழ இயலாது என்ற நிலையில் காரணமாக இந்த முடிவு எடுத்ததாக எழுதிவைத்துள்ளார் போலீசார் கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இருப்பினும் வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!