Home செய்திகள் உணவின்றி தவித்து வருபவர்களுக்கு உதவும் மதுரையைச் சேர்ந்த தன்னார்வலர்

உணவின்றி தவித்து வருபவர்களுக்கு உதவும் மதுரையைச் சேர்ந்த தன்னார்வலர்

by mohan

மதுரை மீனாம்பாள்புரம் பகுதியில் குடியிருந்து வரும் தன்னார்வலர் மற்றும் சமூக ஆர்வலருமான மெய்யப்பன் வயது முதிர்ந்த ஆதரவற்றோர்,மனநலம் குன்றியோர்,மற்றும் ஊனமுற்றோர் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தனக்கு நெருங்கிய நட்பு வட்டாரத்திலும் தெரிந்தவர்களிடமும் உதவி பெற்று அதன்மூலம் நாளொன்றுக்கு 200 பேருக்கும் மேற்பட்டோருக்கு மதிய நேர உணவை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை

தன்னுடன் சேர்த்துக்கொண்டு சமைத்து அப்பகுதியில் உணவிற்கே மிகவும் கஷ்டப்படும் வயது முதிர்ந்தோர் உடல் ஊனமுற்றோர் கண்பார்வையற்றோர் மற்றும் மனநலம் குன்றியவர்களுக்கு மதியநேர உணவை தயாரித்து வழங்கிவருகிறார்.இவரின் இந்த நற்செயலை பாராட்டி இவருக்கு தேவையான உதவிகளை அப்பகுதியில் வசிப்போர் செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com