ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தம் செய்யும் பகுதியினை கடந்த டிசம்பர் 8 ஆம் தேதியன்று காணொளி காட்சி வாயிலாக மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.அதனைதொடர்ந்து பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர், பொதுமக்கள் என பலரும் பேருந்து போக்குவரத்தினை பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் இதனால் மதுரை பெரியார் பேருந்து நிலையம் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டு வந்தது.இந்த நிலையில் இன்று வழக்கம்போல் மக்கள் கூட்டம் மிகுந்து காணப்பட்ட நிலையில், திருமங்கலத்தில் இருந்து பெரியார் பேருந்து நிலையத்திற்கு வந்த அரசு பேருந்து வழித்தடத்தில் நிறுத்துவதற்காக பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் அதிவேகத்தில் வந்ததாக கூறப்படுகிறது.அப்போது எதிர்பாராதவிதமாக பெருந்து நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்த 60 வயது மூதாட்டியை மோதிய நிலையில் பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.இதுகுறித்து மதுரை திடீர்நகர் போலீசார் மற்றும் போக்குவரத்துத்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மதுரையின் மைய பகுதியான பெரியார் பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்காக செயல்பட துவங்கிய மூன்றே மாதத்தில் பேருந்து மோதி மூதாட்டி பலியான சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.