Home செய்திகள் திருப்பரங்குன்றம் பகுதிகளில் திருநங்கைகள் மற்றும் பார்வையற்றவர்களுக்கு நலத்திட்ட பொருள் வழங்கிய வில்லன் நடிகர்

திருப்பரங்குன்றம் பகுதிகளில் திருநங்கைகள் மற்றும் பார்வையற்றவர்களுக்கு நலத்திட்ட பொருள் வழங்கிய வில்லன் நடிகர்

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பராசக்தி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் மாற்று திறனாளிகள், பார்வையற்றவர்கள் திருநங்கைகள் வசிக்கின்றனர்.தற்போது கரோனா 2வது அலை காரணமாக வேலை வாய்ப்பில்லாமல் மிகவும் சிரமப்பட்டனர். இது குறித்து தகவலறிந்த பிரபல சினிமா வில்லன் நடிகர் ரம்மி செளந்தர் மனித நேயத்துடன் பார்வையற்றவர்கள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட 63 பேர்களுக்கு அரிசி, மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்.

தற்போது வேலை வாய்பில்லாமல் வறுமையில் வாடிய திருநங்கை , மற்றும் பார்வையற்ற 63 பேக்கு வில்லன் நடிகர் ரம்மி செளந்தர் வழங்கிய பொருட்களை பெற்று சென்றனர்.வில்லன் நடிகரின் மனிதாபா மான இந்த செயலை இப் பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com